Home மாவட்டங்கள் பெங்களூர் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: ஆக. 27:
வடகிழக்கு பருவ மழையை எதிர்​கொள்​வதற்​காகச் சென்னை மாநக​ராட்​சி​யில் மண்​டல​வாரி​யாகப் பொறுப்பு அமைச்​சர்​கள், கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சென்​னை, கடலூர் உட்பட 5 மாவட்​டங்​களில் நீர்​நிலை​களைத் தூர் வார ரூ.42 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.இதுகுறித்து தமிழக அரசின் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:
வடகிழக்கு பருவ மழைக் காலங்​களில் நிவாரணப் பணி​களை விரைவுபடுத்​த​வும்,
அலு​வலர்​களை ஒருங்​கிணைக்​க​வும், சென்னை மாநக​ராட்​சி​யில் மண்​டல​வாரி​யாக 7 பொறுப்பு அமைச்​சர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.
அதன்​படி அமைச்​சர்​கள் ரமேஷ் (திரு​வொற்​றியூர், மணலி), லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் (மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை), அருண்​ராஜ் (ராயபுரம், திருவிக நகர்), விஜய் பாலாஜி (அம்​பத்​தூர், அண்ணா நகர்,
தேனாம்​பேட்​டை), விஜய் தமி​ழன் பார்த்​திபன் (ஆலந்​தூர், அடை​யாறு), பிரபு (கோடம்​பாக்​கம், வளசர​வாக்​கம்), விக்​னேஷ் (பெருங்​குடி, சோழிங்க​நல்​லூர்) ஆகி​யோர் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட மண்​டலங்​களில் முகாமிட்டு நிவாரணப் பணி​களைத் துரிதப்​படுத்​து​வார்​கள். மேலும், சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா இந்​தப் பணி​களை ஒருங்​கிணைப்​பார்.
இதே​போல், அமைச்​சர்​களு​டன் இணைந்து நிர்​வாக ரீதி​யான
நடவடிக்​கை​களை மேற்​கொள்ள 15 மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் கண்​காணிப்பு அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தக் கண்​காணிப்பு அலு​வலர்​கள், பருவ மழைக் காலங்​களில் தண்​ணீர் தேங்​கும் தாழ்​வான பகு​தி​களைக் கண்​டறிதல், நிவாரண முகாம்​களைத் தயார் நிலை​யில் வைத்​தல், ஜேசிபி இயந்​திரங்​கள்,
மோட்​டார்​கள் மற்​றும் படகு​களைத் தயார் செய்​தல், மருத்​துவ முகாம்​களை அமைத்​தல்,
போக்​கு​வரத்து நெரிசலைச் சரி செய்​தல் மற்​றும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்​தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்​வாறு அறிவிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.