
லே (லடாக்): ஆக. 27:
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் டிஆர்டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது. ஏடிஆர்டிஇ அமைப்பின் தலைமைச் சோதனையாளர் விங் கமாண்டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதிகாரிகள் ஆர்.ஜே.சிங் மற்றும் விவேக் திவாரி ஆகிய மூவர் இந்தச் சாகச பாராசூட் குதிப்பைச் செய்து காட்டினர்.
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் உள்ள நியோமா, மூத் பகுதியில் இச்சோதனை நடைபெற்றது.













