Home செய்திகள் தேசிய செய்திகள் முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

புதுடெல்லி, ஜூலை 30- கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் டெல்​லி​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “கர்​நாட​கா​வில் பரு​வ​மழை பெய்​யாத​தால் அணை​களில் போதிய அளவுக்கு நீர் இல்​லை. கடந்த இரு​முறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்​காற்று குழு அவர்​களின் கோரிக்கையை நிராகரித்​திருந்​தது. தற்​போது தமிழகத்​துக்கு 3500 கன அடி நீர் திறந்​து​விடு​மாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​வது குறித்து அமைச்​சர்​கள், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினேன். அதில் மேல்​முறை​யீடு செய்​வதென முடி​வெடுத்​துள்​ளோம். தமிழக அரசின் சார்​பில் கர்​நாடக அரசின் தலை​மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. என்னை விஜய் சந்திக்க விரும்​புவ​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அடுத்த ஓரிரு நாட்​களில் விஜய் என்​னிடம் தொலைபேசி​யிலும் பேசி​னார். தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்​று, அவரை ம‌ரி​யாதை​யுடன் நடத்​து​வது எனது கடமை.அதனால் விஜ​யுட​னான சந்​திப்​புக்கு சம்​மதம் தெரி​வித்​ததுடன், அவர்​களுக்​குச் சேர வேண்​டியதை வழங்​கு​வ​தாக​வும் கூறியுள்ளேன். அவருட​னான சந்​திப்​புக்கு தேவை​யான அனைத்து ஏற்​பாடு​களை செய்​யு​மாறு உத்​தர​விட்​டுள்​ளேன். காவிரி நதி நீர் விவ​காரத்தை பேச்​சு​வார்த்தை மூலம் தீர்க்க விஜய் விரும்புகிறார். கர்​நாட​கா​வில் உள்ள கிருஷ்ண​ ராஜ​சாகர், கபினி உள்​ளிட்ட அணை​களை​யும் காவிரி ஆறை​யும் பார்​வை​யிடு​மாறு விஜ​யிடம் கோரிக்கை வைத்​துள்​ளேன். அவர் பார்​வை​யிடு​வதற்​காக ஹெலிகாப்​டரைத் தயார் நிலை​யில் வைத்​திருக்​கிறேன். அவரே நேரில் பார்த்து எங்​களது நீர் நிலைகளின் நிலையை தெரிந்துகொள்ளட்டும். இந்த விவ​காரத்​தில் அவர் என்ன முடிவெடுப்​பார் என பொறுத்​திருந்து பார்ப்​போம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.