Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்

ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்

கொல்கத்தா: ஜூலை 30-
மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச் சேர்ந்த மினார் மொண்​டல் அரசு பேருந்து ஓட்​டுந​ராக பணி​யாற்றி உள்​ளார். பின்​னர் அப்​பணியி​லிருந்து வில​கிய அவர், கல் குவாரி வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்​தகம் செய்து வந்​துள்​ளார். குறுகிய காலத்​தில் அதிக பணம் சம்​பா​தித்த அவர், ஆரடம்பர வாழ்க்கை வாழ்ந்​துள்​ளார்.
இதுகுறித்து போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து, மினார் மொண்​டலின் வீட்​டில் போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது பல மூட்​டைகளில் பதுக்கி வைக்கப்​பட்​டிருந்த பணம் மற்​றும் தங்​கத்தை பறி​முதல் செய்துள்ளனர்.