
வாஷிங்டன், ஜூலை 30- உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும். எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிகமான வரியை விதித்து வருகிறார். அந்த வகையில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100% கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நடைமுறைசார் வாக்கெடுப்பு என்ற முறையில் நேற்று முன்தினம் நிறைவேறியுள்ளது.















