Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு

ஈரான் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு

டெஹ்ரான், மே 27- ஈ​ரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதலை தொடங்​கின. இரு தரப்​புக்​கும் இடையே சுமார் 40 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. முதலில் பாகிஸ்​தான் தரப்​பில் அமை​திப் பேச்​சு​வார்த்​தைகள் முன்​னெடுத்​துச் செல்​லப்​பட்​டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெற​வில்​லை. தற்​போது கத்​தார் தரப்​பில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதற்​காக அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் கத்​தார் தலைநகர் தோஹா​வில் முகாமிட்டு உள்​ளனர். பல்​வேறு விவ​காரங்​களில் அமெரிக்​கா, ஈரான் இடையே உடன்​பாடு​கள் எட்​டப்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. இந்த சூழலில் ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள ராணுவ நிலைகளைக் குறி​வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. குறிப்​பாக ஈரானின் முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​ணிவெடிகளை வீசிக் கொண்​டிருந்த ஈரான் ராணுவ படகு​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பறந்த அமெரிக்க போர் விமானத்தைக் குறி​வைத்து ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் இருந்து ஏவு​கணை​கள் ஏவப்​பட்​டன. மேலும் அமெரிக்க போர்க்​கப்​பல்​களுக்கு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும் வகை​யில் ஈரானின் அதி​விரைவு ரோந்து படகு​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் வலம் வந்​தன. இந்த ரோந்துபடகு​கள் மூலம் கடலில் கண்​ணிவெடிகளும் வீசப்​பட்​டன. எனவே தற்​காப்பு நடவடிக்​கைக்​காக ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகுதி மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ஈரானின் ஏவு​கணை தளங்​களைக் குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் குண்​டு​களை வீசின. மேலும் கத்​தார், பஹ்ரைன், குவைத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களில் இருந்து ஈரானை குறி​வைத்து ஹிமார்ஸ் ரக ஏவு​கணை​களும் வீசப்​பட்​டன. அமெரிக்க போர்க்​கப்​பல்​களை நெருங்கி வந்த ஈரான் ரோந்து படகு​கள் மீது போர் விமானங்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாங்​கள் போர் நிறுத்​தத்தை மீற​வில்​லை. தற்​காப்​புக்​காகவே தாக்​குதல் நடத்​தினோம். இவ்​வாறு அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.