Home விளையாட்டு பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்தியா

பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்தியா

கிளாஸ்கோ, ஜூலை 24- 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), ஆதித்யா பிர​தாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். இரவு 10.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரியா கங்​காஸ் (60 கிலோ), ஜது​மணி சிங் (55 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் முதல் சுற்று ஆட்​டங்​களில் களமிறங்​கு​கின்​றனர். இந்​தி​யா​வின் பதக்​கப் பட்​டியலில் குத்​துச்​சண்டை விளை​யாட்டு மீண்​டும் கணிச​மான பங்​களிப்பை வழங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. காமன்​வெல்த் விளை​யாட்​டில் ஒட்​டுமொத்​த​மாக குத்​துச்​சண்​டை​யில் மட்​டும் இந்​தியா இது​வரை 44 பதக்​கங்​களை வென்று குவித்​துள்​ளது. எனவே இந்த முறை​யும் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் சிறந்த திறனை வெளிப்​படுத்​து​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​திய குத்​துச்​சண்டை வீரர், வீராங்​க​னை​களில் 8 பேருக்கு முதல் சுற்​றில் ‘பை’ (நேரடி​யாக அடுத்த சுற்​றுக்​குச் செல்​லும் வாய்ப்​பு) பெற்​றுள்​ளனர். இந்த வகை​யில், ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), பிரியா கங்​காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) ஆகியோர் பதக்​கத்தை உறுதி செய்ய இன்​னும் ஒரே ஒரு வெற்​றியை பெற்​றால் போதும். முன்​னாள் உலக சாம்​பிய​னான லோவ்​லினா போர்​கோஹெய்ன், ஐந்து வீராங்​க​னை​கள் மட்​டுமே பங்​கேற்​கும் மகளிருக்​கான 75 கிலோ எடைப் பிரி​வில் நேரடி​யாக அரை​யிறு​திப் போட்​டிக்​குத் தகுதி பெற்​றுள்​ளார். 54 கிலோ எடைப் பிரி​விலிருந்து 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி​யுள்ள ராணுவ வீராங்​கனை சாக் ஷி சவுத்ரி மீதும் எதிர்​பார்ப்பு உள்​ளது. அவர், தேர்​வுப் போட்​டிகளின் போது உலக சாம்​பியன்​களான நிகத் ஜரீன், மீனாட்சி ஹூடா​வைத் தோற்​கடித்​திருந்​தார். அதைத் தொடர்ந்து செக் கிராண்ட் ஃப்ரீ போட்​டி​யில் தங்​கம் வென்று தனது திறமையை மீண்​டும் நிரூபித்​திருந்​தார்.