Home செய்திகள் உலக செய்திகள் ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன், ஜூலை 21- சேலம் சிறைக்​குள் செல்​போன் வைத்​திருந்​த​தாக கடந்த 32 ஆண்​டு​களாக சிறை​யில் உள்ள ஆயுள் தண்​டனை கைதியை சிறை வார்​டன்​கள் தாக்​கிய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், இதுகுறித்து சிறைத்​துறை நிர்​வாகம் பதிலளிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மணிமங்​கலத்​தைச் சேர்ந்த ஹரிஹரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “எனது தம்பி கோபி (54) கொலை வழக்கு ஒன்​றில் கைதா​னார். அவருக்கு சென்னை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் கடந்த 1994-ம் ஆண்டு மரண தண்​டனை விதித்​தது. இந்த தண்​டனையை உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும் உறுதி செய்த நிலை​யில், குடியரசுத் தலை​வரிடம் அளிக்​கப்​பட்ட கருணை மனு காரண​மாக ஆயுள் தண்​டனை கைதி​யாக கடந்த 32 ஆண்​டு​களாக சேலம் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். கடந்த 8-ம் தேதி கோபி​யின் அறை​யில் சோதனை நடத்​திய சேலம் சிறை வார்​டன்​கள் கோபி செல்​போன் பயன்​படுத்​தி​ய​தாகக் கூறி அவரது கைகளை பின்​புற​மாக கட்டி கால் பாதத்​தில் லத்​தி​யால் அடித்து தாக்​கி​யுள்​ளனர். கடந்த பல ஆண்​டு​களாக சிறை​யில் உள்ள கோபிக்கு சிறையில் உள்ள நடத்தை விதி​கள் நன்கு தெரி​யும் என்​ப​தால் கோபி செல்​போன் பயன்​படுத்​தவே இல்​லை. முன்​கூட்​டிய விடு​தலைக்​காக காத்​திருக்​கும் எனது தம்​பியை சிறை அதி​காரி​கள் உள்​நோக்​கத்​துடன் தாக்​கி​யுள்​ளனர். ரத்த அழுத்​தம், இருதய நோயாளி​யான எனது தம்​பிக்கு சிறைக்​குள் உரிய மருத்​துவ சிகிச்​சை​யும் அளி்க்​க​வி்ல்​லை. இது​போல, 30-க்​கும் மேற்​பட்ட சிறைக் கைதி​களை வார்​டன்​கள் அடித்து துன்​புறுத்​தி​யுள்​ளனர். நடந்த சம்​பவங்​களை வெளியே கூறி​னால் கொலை செய்து விடு​வோம் எனவும் மிரட்​டி​யுள்​ளனர். எனவே சம்​பந்​தப்​பட்ட சிறை அதி​காரி​கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்​க​வும், எனது தம்​பி்க்கு உரிய மருத்​துவ சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் அனிதா சுமந்த், சுந்​தர் மோகன் அமர்​வில் நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் பி.பு​கழேந்தி ஆஜரானார். அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக தமிழக அரசு, சிறைத்​துறை நிர்​வாகம் பதிலளிக்க வேண்​டும், சிறை​யில் உள்ள கோபி​யின் மருத்​துவ அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை ஜூலை 23-க்​கு தள்​ளி வைத்​தனர்​.